தமிழகம் முழுவதும் 20, 453 நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளை இடிக்க, அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்ப வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது.
கடந்த மாதம் சென்னை திருவொற்றியூரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் 25 ஆண்டுகளுக்கு முன்பு அந்த வாரியம் மூலம் கட்டப்பட்ட, குடியிருப்புகளை அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்ப வல்லுநர் குழு ஆய்வு செய்ய அரசு அறிவுறுத்தியது.
அதன்படி, 22,271 குடியிருப்புகளில் அந்த குழு ஆய்வு செய்தது. இதில் 20 ஆயிரத்து 453 குடியிருப்புகள் சேதமடைந்திருப்பதாக தனது அறிக்கையில் குழு தெரிவித்துள்ளது.
Must Read : அவிநாசியில் சோளக் காட்டில் பதுங்கியிருந்த சிறுத்தை தாக்கியதில் வன ஊழியர் காயம்
இவற்றை உடனடியாக இடித்துவிட்டு புதிய குடியிருப்பு கட்ட வேண்டும் என்றும் தொழில்நுட்பக்குழு பரிந்துரைத்துள்ளது. நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திடம் ஆய்வு செய்து தமிழக அரசு இறுதி நடவடிக்கை எடுக்கும் எனக் கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Building collapse, Chennai