ஊரடங்கு காலத்தில் வருமானமின்றி தவித்து வரும் நிலையில், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தினருக்கு, ஊர் பொது பணம் மூலம் மூன்றாயிரம் ரூபாய் கிடைத்துள்ளது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பருவதனஹள்ளி கிராமத்தில் 142 குடும்பங்கள் உள்ளன. அனைவருமே கூலி வேலைக்கு சென்று வாழ்க்கையை நடத்தியவர்கள்.
கொரோனா அச்சத்தால் போடப்பட்ட ஊரடங்கால், இவர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் போக, வருமானமின்றி பல குடும்பங்கள் தடுமாறி வந்தன. இதனை உணர்ந்த ஊர் பெரியவர்கள் கிராமத்தின் பொதுநிதியை எடுத்து பயன்படுத்துவது என முடிவெடுக்க, அதற்கு மக்களும் வரவேற்பு தெரிவித்தனர்
கோயில் திருவிழாக்கள் மற்றும் ஊர் பொது காரியத்திற்காக மக்களிடம் வசூலித்த நிதி 4,26,000 ரூபாய் இருந்திருக்கிறது. அதனை 142 குடும்பங்களுக்கும் மூன்றாயிரம் ரூபாய் வீதம் பிரித்து வழங்கியுள்ளனர்.
மத்திய, மாநில அரசுகள் கொடுத்த நிவாரண உதவி போதவில்லை என தடுமாறுகையில், பருவதனஹள்ளி மக்களுக்கு அவர்களின் பணமே கை கொடுத்துள்ளது. பொது காரியத்திற்காகவும், திருவிழாவிற்காகவும் சேகரிக்கப்பட்ட பணம், ஊரடங்கு நேரத்தில் மக்களின் பசியை போக்கியுள்ளது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Also see...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dharmapuri, Lockdown