முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல்: பிப்.3-ம் தேதி ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்புமனுத் தாக்கல்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல்: பிப்.3-ம் தேதி ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்புமனுத் தாக்கல்

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் தலைமையில் தொண்டர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Erode, India

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பிப்ரவரி 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் தலைமையில் தொண்டர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, திமுக அமைச்சர்கள் முத்துச்சாமி , கே.என்.நேரு, எ.வ. வேலு உள்ளிட்ட திமுக தேர்தல் பணிக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் ஈரோடு மேட்டுக்கடை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை நடத்தினர். காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனும் இந்த கூட்டத்தில் பங்கேற்றார்.

இந்த நிலையில், வரும் 3ஆம் தேதி ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். வேட்புமனு தாக்கலின் போது, முக்கிய தலைவர்கள் பங்கேற்பார்கள் எனக் கூறப்படுகிறது.

First published:

Tags: Erode Bypoll