ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந் தேதி மாரடைப்பால் காலமானார். இதனால் அந்த தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். தே.மு.தி.க. தனித்து போட்டியிடுவதாக அறிவித்து மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆனந்த் என்பவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.
அமமுக வேட்பாளராக சிவபிரசாந்தை அறிவித்தார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகான். ஆனால் அதிமுக வேட்பாளரை இதுவரை அறிவிக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் இன்று காலை எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏவும் ஈரோடு மாநகர எம்.ஜி.ஆர் மன்ற செயலாளருமான கே.எஸ்.தென்னரசு என்பவரை வேட்பாளராக அறிவித்தார்.
இதனைதொடர்ந்து இன்று மாலை ஓபிஎஸ் தரப்பும் வேட்பாளரை அறிவித்தனர். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக செந்தில்முருகன் என்பவர் போட்டியிடுவதாக அறிவித்தார். செந்தில் முருகனுக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது எனக்கூறிய அவர், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரை அறிவித்தால் தங்கள் வேட்பாளரை திரும்ப பெற தயார் எனவும் அறிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “தேர்தல் ஆணைய ஆவணப்படி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் நான் தான். உறுதியாக சசிகலாவிடம் ஆதரவு கேட்போம். இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை என்றாலும் தனி சின்னத்தில் போட்டியிடுவோம்” என ஓபிஎஸ் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Erode Bypoll, Erode East Constituency, OPS