ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாஜக முழு மனதுடன் அதிமுகவை ஆதரிக்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மாநில பாஜக தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிமுக ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரு அணிகளாக செயல்பட்டு வரும் சூழலில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் விருப்பதற்கு ஏற்ப தொகுதியை விட்டுக் கொடுப்பதாக தமாகா தலைவர் ஜி.கே வாசன் அறிவித்துள்ளார். இதையடுத்து, வேட்பாளரை இறுதி செய்யும் பணியில் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இடைத்தேர்தலில் தாங்களும் போட்டியிட உள்ளதாக அறிவித்தார்.
இதையடுத்து இடைத்தேர்தல் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் என இருதரப்பினரும் கூட்டணி கட்சியினரை சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர். அந்த வகையில் ஜிகே வாசனை நேரில் சந்தித்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆதரவு கோரினர். அதே போல் சென்னையில் உள்ள இல்லத்தில் தமிழக முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியனை எடப்பாடி பழனிசாமி தரப்பு சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், கே.பி முனுசாமி ஆகியோர் சந்தித்து ஆதரவு கேட்டனர்.
இதனைதொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அணியினர் தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு சென்று அண்ணாமலையை நேரில் சந்தித்து ஆதரவு கோரினர். அதில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி, ஜெயக்குமார், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாஜக சார்பில் அண்ணாமலை, கரு.நாகராஜன், ஹெச்.ராஜா, விபி துரைசாமி ஆகியோர் இருந்தனர். ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு முழு ஆதரவு வழங்க வேண்டும் என அதிமுகவினர் கோரிக்கை விடுத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, Annamalai, BJP Meeting, Erode Bypoll, Jayakumar