புதிய பொறுப்பாளர்களை அங்கீகரிக்காததால் 23ம் தேதி நடந்த
அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள புகார் கடிதத்தில் தெரிவித்துள்ளார். மேலும், அவர் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய கடிதத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தலைமை அலுவலகம் என்றும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே அதிகார போட்டி என்பது உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தனக்கு முன்னாள் உள்ள அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி வருகிறார். ஏற்கனவே அவர் நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், தற்போது தேர்தல் ஆணையத்திற்கும் புகார் கடிதம் ஒன்றை அளித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு கட்சியும் அவர்களின் கட்சியின் நடவடிக்கை குறித்து, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில் அறிக்கை அளிக்க வேண்டும். அந்தவகையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இது ஒரு வழக்கமான நடவடிக்கை தான், எப்போதெல்லாம் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறதோ, அப்போதெல்லாம் கட்சியின் பொதுச்செயலாளரோ, ஒருங்கிணைப்பாளரோ அதுதொடர்பான அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அந்த அடிப்படையிலே இந்த அறிக்கையை ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளார்.
அந்தவகையில், கடந்த 23ம் நடந்த அதிமுக பொதுக்குழு குறித்தும், இன்று நடந்த நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் குறித்தும் ஒருவிரிவான அறிக்கையை, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஒரு விரிவான அறிக்கையை அனுப்பி வைத்துள்ளார். அதில் முக்கியமாக 23ம் தேதி காலை 10மணிக்கு தொடங்கி 1 மணி வரை நடந்த பொதுக்குழு கூட்டம் குறித்து விரிவாக அறிக்கையாக கொடுத்துள்ளளார்.
அதில் பொருளாளர் என்ற முறையில் பொதுக்குழு கூட்டத்தில் கணக்கு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்றும், ஒருங்கிணைப்பாளர் பதவிக்காலம் முடியாத நிலையில் ஒற்றைத்தலைமை தேவையற்றது. புதிய பொறுப்பாளர்களை அங்கீகரிக்காததால் 23ல் நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது. அதிமுக தலைமை நிர்வாகிகள் கூட்டம் கூட்டுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் இல்லை, உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அவர் விரிவாக தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.