தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து பெற வேண்டிய 15 ஆயிரம் கோடியை பெற நடவடிக்கை எடுக்காததால், தமிழக மக்கள் 300% மின்கட்ட உயர்வை சந்திக்கவுள்ளதாக தமிழ்நாடு பொறியாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஒரு லட்சத்து 33 ஆயிரம் கோடி கடன் சுமையில் இருக்கும் தமிழக மின்சார வாரியம், தனியார் மின் உற்பத்தியாளர்கள் , காற்றலை உற்பத்தியாளர்களிடம் இருந்து வரவேண்டிய 15 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவை தொகையை இன்றுவரை வாரியத்திற்கு வரவில்லை.
தனியார் உற்பத்தி நிறுவனங்கள் பல ஆண்டுகளாக காரணங்களை கூறி ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் மற்றும் விசாரணை க்கு பிறகு கடந்த மாதம் இந்த 15 ஆயிரம் கோடி ரூபாயையும் மின்சார வாரியம் வசூலிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில், 5 வாரங்களுக்கு மேலாகியும் மின்துறை நிதிச்செயலர் மற்றும் வாரியத்தின் உயர் அதிகாரிகள் இது தொடர்பான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தனியார் உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும், இதனை தமிழக அரசும் கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும் பொறியாளர் அமைப்பு தலைவர் காந்தி தெரிவித்தார்.
மேலும் தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து பெற வேண்டிய 15 ஆயிரம் கோடியினை வாரியம் பெறாவிட்டால் , வரும் ஆண்டில் தமிழக மக்கள் 300% மின்கட்டண உயர்வை நிச்சயம் சந்திக்க நேரிடும் என திட்டவட்டமாக காந்தி தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.