மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வை கண்டித்து, அதிமுகவின் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டம் சார்பில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் கண்டன ஆர்ப்பாட்டத்தை கண்டு முதலமைச்சர் ஸ்டாலின் நடுங்கிக் கொண்டிருப்பதாகவும், அதன் காரணமாகவே அதிமுகவினர் மீது வழக்குகளை போடுவதாகவும் சாடினார். திமுக விபத்தில் ஆட்சிக்கு வந்துவிட்டதாக கூறிய ஈபிஎஸ், ஈவு இரக்கமின்றி 12 முதல் 50% வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதாக சாடினார்.
அனைத்து தேர்தலையும் முடித்துவிட்டு சொத்துவரி, மின் கட்டணம் போன்றவை உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, அவற்றை உடனடியாக திரும்ப பெற வேண்டுமென கோரிக்கை விடுத்தார். போட்டோ ஷூட் முதலமைச்சர் என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார் . இன்று திமுகவோடு சேர்ந்து சிலர் கைகூலியாக செயல்படுகின்றனர். அடையாளம் காணப்பட்டு கூண்டோடு விளக்கப்படுள்ளனர்.தகுந்த பாடம் கற்பிக்கப்படும் என்றார்.
Also Read: 'காலை உணவை யாரும் தவறவிடக் கூடாது' : மாணவர்கள் மத்தியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
எடப்பாடி பழனிசாமி பேசி முடித்ததை அடுத்து அதிமுக நிர்வாகிகள் முழக்கமிட தயாராகினர். அப்போது ஈபிஎஸ் லேசாக மயக்கமடைந்தார். அருகில் இருந்த அதிமுக நிர்வாகிகள், தண்ணீர் கொடுத்து அவரை ஆசுவாசுப்படுத்தி அமர வைத்தனர். சிறிது நேரம் அமர்ந்த பிறகு மீண்டும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினார் அதன்பின்னர் ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, DMK, Edappadi palanisamy, Edappadi Palaniswami