அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இன்று
எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுககப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து அ
திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் வானகரம் நோக்கி இபிஎஸ் புறப்பட்டுள்ளார்.
அதிமுக ஒற்றைத்தலைமை விவகாரம் உச்சம் தொட்ட நிலையில், இன்று காலை 9.15 மணிக்கு அக்கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழுவிற்கு தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் விவாதம் முடிந்ததை தொடர்ந்து, வரும் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு உத்தரவு வழங்குவதாக நீதிமன்றம் தெரிவித்தது. இதற்கு முன்னதாக இபிஎஸ் தரப்பில் தொடர்ந்த வழக்கில், பொதுக்குழு நடத்த தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.
இதனால், அதிமுகவின் பொதுக்குழு நடைபெறுமா? எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்து எடுக்கப்படுவாரா என்று தொண்டர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கியுள்ளதாக பார்க்கப்படுகிறது. அதிமுகவில், தலைமை பொறுப்பை முடிவு செய்யக் கூடிய அதிகாரம் படைத்தவர்கள் தொண்டர்கள் தான் என்று கூறினாலும், அதை தீர்மானிக்கும் அதிகாரம் தலைமை கழக நிர்வாகிகள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களிடமே உள்ளது.
அந்த வகையில் அதிமுகவில் அமைப்பு ரீதியிலாக 75 மாவட்டங்கள் உள்ளன. அதில், எடப்பாடி பழனிசாமியே ஒற்றை தலைமையை ஏற்க வேண்டும் என 70 பேர் குரல் கொடுத்துள்ளனர். ஆனால், ஓபிஎஸ்-க்கு ஆதரவாக, அவரின் சொந்த மாவட்டமான தேனியின் மாவட்ட செயலாளர் சையது கான், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் வைத்திலிங்கம், திருச்சி மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராமச்சந்திரன், கன்னியாகுமாரி அசோகன் என 5 பேர் மட்டுமே பின்னால் உள்ளனர்.
இதேபோன்று தலைமைக் கழக நிர்வாகிகள் 74 பேரில் 68 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதிலும், ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர், வெல்லமண்டி நடராஜன், குன்னம் ராமச்சந்திரன் ஆகிய 6 தலைமைக் கழக நிர்வாகிகள் மட்டுமே மற்றொரு அணியாக உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேலும், எடப்பாடி பழனிசாமியை, தலைமைக்கு கொண்டு வர 2,452 பொதுக்குழு உறுப்பினர்கள் பக்கலமாக உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், ஓ.பன்னீர்செல்வதிற்கு 213 பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளதாக தெரிகிறது. அதிலும், ஓபிஎஸ் சொந்த மாவட்டமான தேனியில் உள்ள மொத்தம் 62 பொதுக்குழு உறுப்பினர்களில், 42 பேர் ஈபிஎஸ்-க்கு நேரடியாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Must Read : அதிமுக பொதுக்குழு கூட்டமும் நீதிமன்றங்களில் நிகழ்ந்த பரபரப்பான வாதங்களும்!
உயர் நீதிமன்றம் தடை விதிக்காமல், அதிமுக பொதுக்குழு நடைபெற்றால், அக்கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஏகமனதாக தேர்வு செய்யப்படுவார் என்று இபிஎஸ் ஆதரவாளர்களின் நம்பிக்கையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.