முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஈரோடு இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளரை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி!

ஈரோடு இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளரை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி!

ஈரோடு கிழக்கு - அதிமுக வேட்பாளர் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு - அதிமுக வேட்பாளர் அறிவிப்பு

ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளராக உள்ளார் K.S.தென்னரசு.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Erode, India

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந் தேதி மாரடைப்பால் காலமானார். இதனால் அந்த தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். தே.மு.தி.க. தனித்து போட்டியிடுவதாக அறிவித்து மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆனந்த் என்பவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

அமமுக வேட்பாளராக சிவபிரசாந்தை அறிவித்தார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகான். ஆனால் அதிமுக வேட்பாளரை இதுவரை அறிவிக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. எடப்பாடி தலைமையிலான அதிமுக போட்டியிட்டாலும் இரட்டை இலை கிடைக்குமா என்பது குறித்து தெளிவில்லாத நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 27.2.2023 அன்று நடைபெற உள்ள ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத்தொகுதிக்கான இடைத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக K.S.தென்னரசு, Ex M.LA., (ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்) தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

K.S.தென்னரசு 2001 ஒருங்கிணைந்த ஈரோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் , 2016-ம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.கவும் இருமுறை எம்.எல்.ஏ.வானார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: ADMK, Edappadi Palaniswami, Erode Bypoll, Erode East Constituency