எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றத்தின் ஆணையை ரத்து செய்த உச்சநீதிமன்றம், வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறையே விசாரிக்கும் என உத்தரவிட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த காலத்தில் நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களை அவரது உறவினர்களுக்கு வழங்கியதில் 4,800 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளதாக, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
இதைஎதிர்த்து 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்த நிலையில், சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிபிஐ விசாரணையை தாங்கள் கோரவில்லை என தமிழ்நாடு அரசு மற்றும் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் வாதாடப்பட்டது. சிபிஐ விசாரணை வேண்டாம் என்றும், சிறப்பு விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஈபிஎஸ் தரப்பில் வாதாடப்பட்டது. வாதங்களை கேட்ட நீதிபதி ரமணா, சிபிஐ விசாரணைக்கான உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்வதாகவும், இந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறையே தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடர்ந்து நடைபெறும் எனவும் உத்தரவிட்டார்.
Published by:Ramprasath H
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.