முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பணபலத்தால் தி.மு.க வெற்றி; நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள்தான்.. எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை

பணபலத்தால் தி.மு.க வெற்றி; நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள்தான்.. எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

edappadi palanisamy | பணபலம் மூலம் தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெறும் என்று அ.தி.மு.க இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளரைவிட தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 65,000-க்கும் கூடுதலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்தநிலையில், கோயம்புத்தூர் விமான நிலையத்தில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி. தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தொண்டர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் நன்றி.

திரிபுரா, மேகாலயாவில் பாஜக பெற்ற வெற்றிக்கு பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள். இடைத்தேர்தலில் பணநாயகம் வென்றுள்ளது. பணமழை பொழிந்துள்ளது.

22 மாதமாக சம்பாதித்த பணத்தை வைத்து தண்ணீர் போல் பணத்தை வாரி இறைத்து அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

120 இடங்களில் வாக்காளர்களை டெண்ட் அமைத்து பட்டியில் அடைத்து பணத்தை கொடுத்து பல்வேறு பரிசு பொருள்கள் கொடுத்துள்ளனர். வெள்ளி கொலுசு, வாட்ச், குக்கர் வழங்கி வாக்காளர்கள் வீடுகளுக்கு கோழிக்கறி கொடுத்து மளிகை ஜாமான் கொடுப்பதாக டோக்கன் வழங்கி வெற்றி பெற்றுள்ளனர்.

மத்திய தேர்தல் ஆணையம், மாநிலத் தேர்தல் ஆணையம், மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்தோம். ஆனால் தேர்தல் அதிகாரிகள் விதிமீறலில் ஈடுபட்ட திமுக மீது நடவடிக்கை எடுக்கவில்லை. 22 மாத காலத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் சம்பாதித்த பணத்தை வைத்துக்கொண்டு முதலீடு செய்து வெற்றி பெற்றுள்ளார்கள். ஜனநாயகபடி நின்றால் அ.தி.மு.க வெற்றி பெற்றிருக்கும்.

அமைச்சர்கள் தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளனர். தி.மு.க, ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் டெபாசிட் இழந்தது. வாக்காளர் பெருமக்களை பட்டியில் அடைத்தது ஒரு சில ஊடகங்களில் மட்டும் வந்தது. ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டி இருந்தால் வெற்றி பெற்றிருக்க முடியாது.

இந்த தேர்தலை வைத்து தி.மு.க வெற்றி பெற்றதாக கொண்டாடுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்.

இந்த வெற்றி தேர்தல் ஆணையத்தின் தோல்வி. ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்திருந்தால் அதிமுக வெற்றி பெற்றிருக்கும். அண்ணாமலை அதிமுக குறித்து ஒன்றும் சொல்லவில்லை. இந்த தேர்தல் முழுக்க முழுக்க ஆட்சி, அதிகாரம், பணபலம், பரிசு பொருட்கள் மூலம் தி.மு.க வெற்றி பெற்றுள்ளது.

33 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டபேரவைக்குள் நுழைகிறார் ஈவிகேஎஸ்!- கடந்து வந்த அரசியல் பாதை!

அதிமுக பரிசு பொருள் கொடுத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கும். தேர்தல் ஆணையம் இருக்கா இல்லையா என்பதே சந்தேகமாக உள்ளது. கொரோனா தொற்று உள்ளிட்ட காலங்களில் ஏழை எளிய மக்கள் வருமானம் இல்லாத சூழலில் இருந்தனர். இதை பயன்படுத்தி ஆசை வார்த்தை கூறி பரிசு பொருள் கொடுக்கிறோம் என வாக்கு பெற்றுள்ளனர். மக்கள் சுயமாக வாக்களிக்கவில்லை. ஜனநாயக படுகொலை. இது பேராபத்து’ என்று தெரிவித்தார்.

First published:

Tags: ADMK, Edappadi palanisamy