வெற்றிகரமான தாக்குதலுக்கு மோடியின் துணிச்சலே காரணம்: முதல்வர் பழனிசாமி பாராட்டு
பிரதமர் மோடியின் துணிச்சல்மிக்க செயல்பாட்டின் காரணமாக, வெற்றிகரமான விமானப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி பெருமிதம்

பிரதமர் மோடியின் துணிச்சல்மிக்க செயல்பாட்டின் காரணமாக, வெற்றிகரமான விமானப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி பெருமிதம்
- News18
- Last Updated: February 26, 2019, 8:42 PM IST
பயங்கரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்காக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.
கடந்த 14-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா என்ற இடத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 41 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலை பாகிஸ்தானை மையமாகக் கொண்டு இயங்கும் ஜெய்ஷ்-இ-முகம்மது என்ற இயக்கம் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படையைச் சேர்ந்த போர் விமானங்கள், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பால்கோட், சகோதி, முஸாபராபாத் ஆகிய இடங்களில் நுழைந்து பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியதாக விமானப்படை தெரிவித்துள்ளது. 12 மிராஜ் ரக விமானங்கள் மூலம் 1000 கிலோ வெடிகுண்டு பயங்கரவாதிகள் முகாம் மீது வீசப்பட்டு அவை முற்றிலும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு பாராட்டு தெரிவித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டு்ளளார். அதில், பிரதமர் மோடியின் துணிச்சல்மிக்க செயல்பாட்டின் காரணமாக, வெற்றிகரமான விமானப்படை தாக்குதல் நடத்தப்பட்டு, பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதற்கு தமிழக மக்கள் சார்பாக பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்ளவதாக கூறியுள்ளார்.
கடந்த 14-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா என்ற இடத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 41 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலை பாகிஸ்தானை மையமாகக் கொண்டு இயங்கும் ஜெய்ஷ்-இ-முகம்மது என்ற இயக்கம் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புல்வாமா தாக்குதல் நிகழ்த்தப்பட்ட இடம்.

மிராஜ் 2000 விமானத்தை இந்தியா உட்பட ஃபிரான்ஸ், எகிப்த், ஐக்கிய அமீரகம், பெரு, தைவான், க்ரீஸ் மற்றும் பிரேசில் உள்ளிட்ட நாடுகளும் பயன்படுத்தி வருகின்றன. ஆனால் பிரேசில் இந்த விமானத்திற்கு ஓய்வு அளித்துவிட்டது. பிற நாடுகள் இன்று வரை பயன்படுத்தி வருகின்றன.
இந்தத் தாக்குதலுக்கு பாராட்டு தெரிவித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டு்ளளார். அதில், பிரதமர் மோடியின் துணிச்சல்மிக்க செயல்பாட்டின் காரணமாக, வெற்றிகரமான விமானப்படை தாக்குதல் நடத்தப்பட்டு, பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதற்கு தமிழக மக்கள் சார்பாக பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்ளவதாக கூறியுள்ளார்.