தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் மொத்தம் 2.30 கோடி மின் இணைப்புகளும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் உள்ளன. இந்த மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தமிழ்நாடு மின் வாரியம் அறிவிப்பை வெளியிட்டது.
ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த நவம்பர் 15ம் தேதி துவங்கப்பட்டது. 2கோடியே 67 லடசம் மின் நுகர்வோர் தங்கள் ஆதார் மற்றும் மின் இணைப்பு எண்ணை இணைக்க முதலில் டிசம்பர் 31ம் தேதி வரை அவகாசம் இருந்தது. பின்னர் இது ஜனவரி 31-தேதி வரை அது நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் கிட்டத்தட்ட இன்னும் 50 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆதாருடன் மின் இணைப்பை சேர்ப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஏற்கனவே நீட்டிக்கப்பட்ட அவகாசம் முடிவடைய இன்னும் 2 நாட்களே உள்ளதால் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் இருந்தால் விரைவில் இணைத்துவிடுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aadhar, EB Bill, Electricity bill, Tamil Nadu