முகப்பு /செய்தி /தமிழ்நாடு / E Registration: வெளியூர் செல்ல இ-பதிவு அவசியம்... எப்படி பதிவு செய்வது?

E Registration: வெளியூர் செல்ல இ-பதிவு அவசியம்... எப்படி பதிவு செய்வது?

காவல்துறை

காவல்துறை

தமிழ்நாட்டில் மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கிடையே பயணம் செய்ய இ-பதிவு அவசியம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டில் 10-ம் தேதி காலை 4.00 மணி முதல் 24-ம் தேதி காலை 4.00 மணி வரை இரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், முழு ஊரடங்கு காலத்தில், தமிழ்நாட்டில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, 15-ம் தேதியிலிருந்து காலை 4.00 மணி முதல் 24-ம் தேதி காலை 4.00 மணி வரை ஏற்கெனவே அமலில் உள்ள கட்டுப்பாடுகளுடன் ஒருசில புதிய கட்டுப்பாடுகள் விதித்தது தமிழக அரசு.

இதனைத் தொடர்ந்து, மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கிடையே அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு/வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு பயணம் செய்யும் பொதுமக்கள் தங்களது ஆவண ஆதாரங்களை (https://eregister.tnega.org) இணையதளத்தில் இ-பதிவு செய்து, இ-பதிவு மேற்கொண்டதற்கான ஆதாரத்தை வைத்துக் கொண்டு எவ்விதமான தடையின்றி, தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசு அறிவித்த இ-பதிவு என்பது இ-பாஸ் என்று தவறாக புரிந்துகொள்ளப்பட்ட நிலையில், அதுகுறித்து தமிழக அரசு விளக்கம் அளித்தது. அந்த விளக்கத்தில், ‘பொதுமக்கள்,இ -பாஸ் போன்று பதிவு செய்து அனுமதிக்காக காத்திருக்காமல், இ-பதிவு மூலம் பதிவு செய்து பொதுமக்கள் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளலாம்’ என்று தெரிவிக்கப்பட்டது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: CoronaVirus, Lockdown