தாம்பரம் வில்லோஸ் ஸ்பாவின் உரிமையாளர் ஹேமாஜூவானி தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்,
சென்னையில் பல இடங்களில் தங்களுக்கு மசாஜுடன் கூடிய அழகு நிலையங்கள் உள்ளதாகவும், அவற்றில் அடிக்கடி காவல்துறையினர் தொந்தரவு செய்வதாக தொடர்ந்த வழக்கில் ஆதாரம் இல்லாமல் காவல்துறையினர் தொந்தரவு செய்ய கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தாம்பரத்தில் உள்ள தங்களது கிளையில், விபச்சாரம் நடைபெறுவதாக பொய் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும், பணம் கேட்டு காவல்துறையினர் மிரட்டுவதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தாம்பரம் காவல் ஆய்வாளர்,உதவி ஆய்வாளர் ஆகியோர் நேரில் ஆஜராகி இந்த சம்பவத்திற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினர்.
இதையடுத்து, காவல்துறையினர் மசாஜ் நிலையங்களை விபச்சார நிலையம் என்ற கண்ணோட்டத்திலேயே பார்ப்பதாகவும், தங்களுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாக நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
மசாஜ் நிலையங்களில் விதிமீறல்கள் நடைபெறுவதாக புகார்கள் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, மிரட்டும் நோக்கில் செயல்பட கூடாது என அறிவுறுத்தி விசாரணையை நவம்பர் 12ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.