முகப்பு /செய்தி /தமிழ்நாடு / இனி ‘தண்டோரா’ தேவையில்லை.. மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு..

இனி ‘தண்டோரா’ தேவையில்லை.. மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு..

இனி ‘தண்டோரா’ தேவையில்லை.. மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு..

இனி ‘தண்டோரா’ தேவையில்லை.. மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு..

தண்டோரா போடக் கடுமையான தடை விதிப்பது நல்லது. மீறி ஈடுபடுத்துபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அறிவியல் வளர்ந்துவிட்டது, தொழில்நுட்பம் பெருகிவிட்டது, இச்சூழலில் ‘தண்டோரா’ போடுவது இன்னும் தொடர வேண்டியத் தேவையில்லை என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், மக்களிடம் முக்கிய செய்திகளை விரைவாகச் சேர்க்கும் விதத்தில் இன்னும் சில ஊர்களில் தண்டோரா போடும் பழக்கம் இருப்பதையும், அதைச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி வேதனைப்படுவதையும் கண்டேன்.

அறிவியல் வளர்ந்துவிட்டது, தொழில்நுட்பம் பெருகிவிட்டது, இச்சூழலில் ‘தண்டோரா’ போடுவது இன்னும் தொடர வேண்டியத் தேவையில்லை. ஒலி பெருக்கிகளை வாகஙனங்களில் பொருத்தி வலம் வரச்செய்வதன் மூலம் மூலை முடுக்குகளிலெல்லாம் தகவல்களைக் கொண்டு சேர்த்திட இயலும்.

எனவே, தண்டோரா போடக் கடுமையான தடை விதிப்பது நல்லது. மீறி ஈடுபடுத்துபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். இச்செய்தி ஊராட்சி அமைப்புகள் வரை ஊடுருவுமளவு பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

First published:

Tags: Iraianbu IAS, TN Govt