‘கெத்து’ தமிழ் வார்த்தையா? அமைச்சரை விமர்சித்த திமுக எம்.பி.!
3 ஆண்டுகளுக்குப் பிறகு 'கெத்து' தமிழ் வார்த்தை தான் என கண்டுபிடித்துள்ளது! வாழ்த்துக்கள்!

மாஃபா.பாண்டியராஜன் - தமிழக அமைச்சர்
- News18 Tamil
- Last Updated: September 21, 2019, 3:52 PM IST
‘கெத்து’ என்பது தமிழ் வார்த்தை தான் என தெரிவித்துள்ள அமைச்சர் மா.பா.பாண்டியராஜனின் கருத்தை திமுக எம்.பி.வில்சன் விமர்சித்துள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான படம் கெத்து. அப்போது 'கெத்து' என்பது தமிழ் சொல் அல்ல என தெரிவித்த அதிமுக அரசு, அப்படத்திற்கு கேளிக்கை வரிச் சலுகை வழங்க மறுத்தது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட போது, சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தமிழ் அகராதியில் 'கெத்து' என்ற வார்த்தை இல்லை எனவும் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அளித்த விளக்கத்தின் படியும் இது தமிழ் சொல் அல்ல என தமிழக அரசு உறுதியாய் சொன்னது.இந்நிலையில், மா.பா. பாண்டியராஜனின் தற்போதைய கருத்தை விமர்சித்துள்ள திமுக எம்.பி. வில்சன், " 'கெத்து' தமிழ் வார்த்தை இல்லை என கூறி உதயநிதி ஸ்டாலின் படத்திற்கு கேளிக்கை வரிச் சலுகை மறுத்த அதிமுக அரசு, 3 ஆண்டுகளுக்குப் பிறகு 'கெத்து' தமிழ் வார்த்தை தான் என கண்டுபிடித்துள்ளது! வாழ்த்துக்கள்! இதைத் தான் நான் வாதாடி 2016 ஆண்டே உயர் நீதிமன்றமும் தீர்ப்பளித்தது " என தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக அரசை விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான படம் கெத்து. அப்போது 'கெத்து' என்பது தமிழ் சொல் அல்ல என தெரிவித்த அதிமுக அரசு, அப்படத்திற்கு கேளிக்கை வரிச் சலுகை வழங்க மறுத்தது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட போது, சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தமிழ் அகராதியில் 'கெத்து' என்ற வார்த்தை இல்லை எனவும் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அளித்த விளக்கத்தின் படியும் இது தமிழ் சொல் அல்ல என தமிழக அரசு உறுதியாய் சொன்னது.இந்நிலையில், மா.பா. பாண்டியராஜனின் தற்போதைய கருத்தை விமர்சித்துள்ள திமுக எம்.பி. வில்சன், " 'கெத்து' தமிழ் வார்த்தை இல்லை என கூறி உதயநிதி ஸ்டாலின் படத்திற்கு கேளிக்கை வரிச் சலுகை மறுத்த அதிமுக அரசு, 3 ஆண்டுகளுக்குப் பிறகு 'கெத்து' தமிழ் வார்த்தை தான் என கண்டுபிடித்துள்ளது! வாழ்த்துக்கள்! இதைத் தான் நான் வாதாடி 2016 ஆண்டே உயர் நீதிமன்றமும் தீர்ப்பளித்தது " என தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக அரசை விமர்சித்து பதிவிட்டுள்ளார்.