விருதுநகரை சேர்ந்த 22 வயது பெண் தனியார் ரெடிமேட் ஆடைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மேலரத வீதியை சேர்ந்த
திமுக பிரமுகர் ஹரிஹரன் என்பவருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. காதலன் என்பதால் அந்தபெண் அவருடன் தனிமையில் சந்தித்து பேசிவந்துள்ளார். அப்போது இருவரும் நெருக்கமாக பழகியுள்ளனர்.
காதலியுடன் நெருக்கமாக இருந்ததை ரகசியமாக ஹரிஹரன் வீடியோ எடுத்து வைத்துள்ளார். இந்நிலையில் மொன்னி தெருவை அவரது நண்பரான திமுக நிர்வாகி ஜீனைத் அகமது, பிரவீன் மற்றும் அதே தெருவைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 4 பேரும் அந்த வீடியோவை பார்த்துள்ளனர். இதனையடுத்து ஜீனைத் அகமது அந்த ஆபாச வீடியோவை காட்டி மிரட்டி அந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். ஹரிஹரன் மற்றும் அவரது நண்பர் உட்பட 7 பேர் ஆபாச வீடியோவை காட்டி மிரட்டி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.
எங்களது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைதளத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர். இதன் காரணமாக அந்தப்பெண் யாரிடமும் சொல்லாமல் அச்சத்தில் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் இளைஞர்களின் தொல்லை தாங்க முடியாமல் டிரைவர் வேலை பார்க்கும் மாடசாமியிடம் எடுத்துச்சொல்லி, காப்பாற்றும்படி கெஞ்சியிருக்கிறார்.
காதலியுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு.. 100 பவுன் கேட்டு காதலன் கறார்.. கண்ணீர் வடிக்கும் கர்ப்பிணி பெண்
மாடசாமியோ, அந்த வீடியோவை தனது செல்போனுக்கு ஃபார்வேர்ட் செய்துகொண்டு, ‘அந்த 7 பேரிடம் பழகியதைப் போல என்னிடமும் பழகவேண்டும். மறுத்தால், இந்த வீடியோவை உன் அம்மாவிடம் காட்டுவேன்.’ என்று மிரட்டி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். உதவ வேண்டிய மாடசாமியும் மிரட்டி, அதே தவறைச் செய்ததால் விரக்தியடைந்த இளம்பெண், கடந்த 6 மாத காலமாக வீடியோவைக் காட்டி மிரட்டி, 7 பேர் தன்னைத் தொடர்ந்து சிதைத்து வந்ததையும், மாடசாமியின் அத்துமீறலையும், குமுறலுடன் புகாராக எழுதி, விருதுநகர் பாண்டியன் நகர் காவல்நிலையத்தில் கொடுத்தார். இப்புகாரின் பேரில் திமுகவை சேர்ந்த இருவர், கூலி தொழிலாளிகள் இருவர், பள்ளி மாணவர்கள் 4 பேர் என 8 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.கவுக்கு எதிராக நெட்டிசன்கள் ட்விட்டரில் ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர். இந்தநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தி.மு.க மகளிரணித் தலைவரும், தூத்துக்குடி எம்.பியுமான கனிமொழி ட்வீட் செய்துள்ளார். அவருடைய ட்விட்டர் பதிவில், ‘விருதுநகர் மாவட்டத்தில் 22 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது ஆறுதலைத் தருகிறது. குற்றம் செய்தவர்கள் யாராக இருப்பினும் கடுமையாகத் தண்டிக்கப் படவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.