அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக திமுக எம்.எல்.ஏ. செஞ்சி மஸ்தான் நிதி வழங்கிய நிலையில், அது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு நிதி திரட்டுவதற்காக இம்மாதம் 15 ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் வி.ஏ.டி. கலிவரதன் செஞ்சி எம்.எல்.ஏ., செஞ்சி மஸ்தானை அவரது வீட்டிற்குச் சென்று சந்தித்தார்.
அப்போது, அயோத்தியில், ராமர் கோயில் கட்டுவதற்கு எம்.எல்.ஏ. மஸ்தான் வாழ்த்து தெரிவித்ததோடு 11,000 ரூபாய் நிதியும் வழங்கினார்.
இது குறித்து, விழுப்புரத்தில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மஸ்தான் கூறுகையில், இதுவரை 304 கோயில் கும்பாபிஷேகங்களில் கலந்து கொண்டிருக்கிறேன் என்றும், சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவன் நான்.
Must Read : திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடம்?
இதை உணர்ந்த பாஜகவினர் என்னிடம் நிதி கேட்டனர். நானும் மனமுவந்து என்னாலான நிதியை கொடுத்துள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.