குடும்ப தலைவிகளுக்கான 1000 ரூபாய் அடுத்த நான்கு ஆண்டுகளிலும் வழங்க மாட்டர்கள். அடுத்த ஆண்டு அடுத்த ஆண்டு என சொல்லி கொண்டே நான்காண்டை கடத்தி விடுவார்கள் என
திமுக அரசு மீது சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனி சாமி
குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், முதலமைச்சர் இன்று 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டது யானைப் பசிக்கு சோளப் பொறி போன்றது என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்தித்துள்ளார்.
திமுக ஆட்சி அமைத்து இன்றுடன் 1 ஆண்டு நிறைவு பெறும் நிலையில் 110-விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் பேரவையில் அறிவித்தார்.
சட்டபேரவைக்கு எப்போதும் 10 மணிக்குள் வரும் அதிமுகவினர் இன்று காலை 10.30 மணிக்கு வந்தனர். எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக எம்.எல்.ஏக்கள் ஒன்றுசேர எதிர்கட்சி அலுவலகம் உள்ளே சென்றனர்.
சட்டபேரவையில் முதலமைச்சர் 110 விதியின் கீழ் பேசி முடித்த பின்பு, தலைமை செயலக வளாகத்தில் எதிர்கட்சி தலைவர் பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டில் சட்டம் ஒழுங்கு முழுமையாக கெட்டு விட்டது, அதிமுக ஆட்சி காலத்தில் மேற்கொண்ண பணிகளுக்கு தான் முதலமைச்சர் திறப்பு விழா காண்கிறார்,
இந்த ஓராண்டு ஆட்சியில் எந்த புதிய திட்டமும் அறிவிக்கப்பட்டவில்லை.
அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கு தெரிவிக்கிறேன். காவிரி மற்றும் அதன் கிள்ள ஆறுகள் மாசுபடுவதை தடுக்க அதற்கு ஒரு திட்டத்தை தீட்டி பிரதமரிடம் வழங்கியதன் அடிப்படையில் நடந்தாய் வாழி என்ற திட்டம் அறிமுகபடுத்தப்பட்டது. குடிமராமத்து என்ற அற்புதமான திட்டத்தை நிறைவேற்றி உள்ளோம்.
விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டம் மூலம் அதிக அளவில் இழப்பீடு பெற்று தந்தது அதிமுக அரசு,6 மாவட்டங்கள், 7 கோட்டங்கள், 27 வட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க - ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு.. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செய்த சாதனைகள் என்ன?
தடையில்லா மின்சாரம்,அதிலும் விவசாயிகளுக்கு மும்மனை மின்சாரம் வழங்கியது அதிமுக அரசு, தாலிக்கு தங்கம் என்னும் அற்புதமான திட்டத்தை ஏழை எளிய குடும்பத்தினை சேர்ந்த பெண்கள் கல்வியை ஊக்குவிக்க அறிவித்து செயல்படுத்தியது அதிமுக அரசு.
கொரானோ காலத்திலும் அதிக தொழில் மூதலிட்டை ஈர்த்தது அதிமுக அரசு,நீட் தேர்வு ரத்து குறித்து சட்டமன்ற பொது தேர்தலின் போது அறிவித்தார்கள். முதல் கையெழுத்து ரத்து என்பது பச்சை பொய். நீட் தேர்வு கொண்டுவந்ததும் திமுக தான், ரத்து செய்வதாக நாடகம் போடுவதும் அவர்கள் தான்,ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதியில் மினி கிளினிக் கொண்டு வந்தது அதிமுக அரசு.
அவர்களுக்கு மருத்துவம் அளிப்பது கூட இன்றைக்கு இவர்களால் பொறுத்து கொள்ள முடியவில்லை. கல்விக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்தது அதிமுக அரசு,சென்னை மாநகரில் குற்றங்களை தடுக்க சிசிடிவி பொறுத்தி உள்ளோம் என தெரிவித்தார்.
இதையும் படிங்க - திமுக அரசின் ஓராண்டுப் பயணமும்.. சர்ச்சைகளும்!
தொடர்ந்து பேசிய அவர், அதிக அளவிலான சாலைகளை விரிவாக்கம் செய்து, தரமான சாலைகளை அமைத்து கொடுத்தோம். அதிக அளவிலான தார்சாலைகள் கொண்ட மாநிலமாக தமிழகத்தை உயர்த்தி கட்டினோம், ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த மாணவர்களின் மருத்துவ கனவை 7.5% இட ஒதுக்கீடு மூலம் நிறைவேற்றியது அதிமுக அரசு. இப்படி பல்வேறு பெரிய்திட்டங்களை நிறைவேற்றி சாதனை மேல் சாதனை படைத்தது அதிமுக அரசு.
ஓராண்டு சாதனையை முதல்வர் வெளியிட்டுள்ளார். மக்கள் வேதனை மேல் வேதனை படுகின்றனர். அவர்கள் செய்தது சாதனை அல்ல வேதனை. நாட்டிலேயே எங்கும் தயாரிக்க முடியாத வகையில் ஒழுகும் வெல்லத்தை மக்களுக்கு பொங்கல் தொகுப்பில் கொடுத்தனர். விஞ்ஞான முறைப்படி பொங்கல் தொகுப்பு கொடுத்த அரசு திமுக அரசு, வரலாற்றிலேயே யாரும் கொடுக்க முடியாத பொங்கல் பரிசு இது.
பெண்களுக்கு இலவச பயணத்தில் அறிவிப்பு ஒன்று செய்வது ஒன்றாக உள்ளது. மாதந்தோறும் கேஸ் மானியம் 100 ரூபாய் இதுவரை வழங்கவில்லை,ஒரிரு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டு 60% நிறைவேற்றியதாக கூறி வருகிறார்கள்.
10 ஆண்டுகளாக தடையில்லா மின்சாரம் வழங்கியது அதிமுக அரசு. இன்று மீண்டும் மின்வெட்டு நிலவி வருகிறது என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, இன்றைய 110 விதியின் கீழ் அறவிக்கப்பட்டது யானைக்கு சோளப் பொறி போன்றது, எங்களை தான் பின்பற்றுகிறார்கள், அவர்கள் சொந்தமாக எதுவும் அறிவிக்கவில்லை.
100க்கு 30% பேருந்துகள் சாதாரண கட்டண பேருந்துகள் இருக்கும் சூழலில் மற்ற பேருந்துகளில் கட்டணம் செலுத்தி தான் பயணிக்கின்றனர். குடும்ப தலைவிகளுக்கான 1000 ரூபாய் அடுத்த நான்கு ஆண்டுகளிலும் வழங்க மாட்டர்கள். அடுத்த ஆண்டு அடுத்த ஆண்டு என சொல்லி கொண்டே நான்காண்டை கடத்தி விடுவார்கள் என தெரிவித்தார்.
தொடர்ந்து அதிமுகவினர் இன்றைய பேரவை நிகழ்வுகளில் முழுவதும் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.