பேரறிவாளன் விடுதலை தீர்ப்பை வரவேற்கிறோம்; மற்ற 6 பேரையும் விரைவில் விடுவிக்க வேண்டும் - விஜயகாந்த்
பேரறிவாளன் விடுதலை தீர்ப்பை வரவேற்கிறோம்; மற்ற 6 பேரையும் விரைவில் விடுவிக்க வேண்டும் - விஜயகாந்த்
விஜயகாந்த்
DMDK Leader Vijayakanth | ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பை வரவேற்கிறோம் என்றும் மற்ற 6 பேரை விரைவில் விடுவிக்க வேண்டுமென தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பை வரவேற்கிறோம் என்றும் மற்ற 6 பேரை விரைவில் விடுவிக்க வேண்டுமென தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு மே 21ம் தேதி சென்னை அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூரில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பேரறிவாளன் முருகன், நளினி, சாந்தன், ராபர்ட் பயாஸ் உள்ளிட்ட ஏழு பேர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இந்த வழக்கில் 31 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது, ஆளுநர் முடிவு எடுக்காமல் காலதாமதப்படுத்தியதற்கு முன்னமே உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அரசியல் சாசனப்பிரிவு 142 கீழ் பேரறிவாளனை விடுதலை செய்ய உத்தரவிட்டு தீர்ப்பளித்தது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து தமிழக அரசியல் தலைவர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உள்ளிட்ட பலர் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்று உள்ளனர். பேரறிவாளன் இல்லத்தில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தீர்ப்பு என் தாயின் நீண்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று பேரறிவாளன் நெகிழ்ச்சி உடன் தெரவித்தார்.
இந்நிலையில் இந்த தீர்ப்பு தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 31 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மனதார வரவேற்கிறேன். தனது பாதி காலத்தை சிறையிலேயே அவர் அனுபவித்து விட்ட நிலையில் பேரறிவாளனின் விடுதலை அவரது தாயார் அற்புதம்மாளின் சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. அற்புதம்மாளின் விடா முயற்சியால் இன்று தனது மகனை மீட்டெடுத்துள்ளார். அவருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
பேரறிவாளனின் தண்டனை காலத்தை மேலும் நீட்டிக்காமல் அவரை விடுதலை செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும் தேமுதிக சார்பில் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட மேலும் 6பேரையும் விரைவில் விடுவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றுள்ளார்.
Published by:Vijay R
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.