திண்டுக்கல்லில் கந்துவட்டி கொடுத்து வசூல் செய்த 3 பேர் போலீஸார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி ஏடிஎஸ் நகரைச் சேர்ந்தவர் பழனிவேல் ராஜா. இவர் சின்னாளபட்டி அருகே உள்ள செட்டியபட்டி பிரிவில் சத்தியம் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். அம்பாதுறையைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் காய்கறிகளை வாங்கி விற்று பிழைப்பு நடத்தி வருகிறார். இவர் பழனிவேல் ராஜாவிடம் தனது இருசக்கர வாகனத்தின் ஆர்.சி.புக்கை வைத்து ரூபாய் 20 ஆயிரம் வாங்கியுள்ளார். இதனை சுரேஷ் மாதத்தவணை மூலமாக கடன் முழுவதையும் செலுத்தியுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட பழனிவேல் ராஜா, சுரேஷுக்கு ஆர்சி புக்கை தராமல் சாக்குபோக்கு சொல்லியுள்ளார்.
அதே நிறுவனத்தில் வசூல் தரகர்களாக பணிபுரியும் வேல்முருகன் மற்றும் முருகேசன் ஆகிய இருவரும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சுரேஷ் தனது இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் இருந்து காய்கறிகள் வாங்கிக் கொண்டு வரும் வழியில் அவரை மறித்து இன்னும் பணம் தரவேண்டும் இந்நிலையில் எங்கள் முதலாளியிடம் நீ ஆர்சி கேட்டுள்ளயா? என தகராறு செய்து தகாத வார்த்தைகளால் திட்டி அடித்துள்ளனர்.
மேலும் கட்டவேண்டிய பணத்துக்காக உன் மனைவியை பணயமாக வைப்பாயா என கேவலமாக பேசியுள்ளனர். இதனால் மனம் விரக்தி அடைந்த சுரேஷ் சுடு கம்பியால் தன் வயிற்றுப் பகுதியில் சூடு வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் பழனிவேல் ராஜா, வேல்முருகன், முருகேசன் ஆகிய மூவரையும் கந்து வட்டிக்கு கொடுத்து தகாத வார்த்தைகளால் ஒருமையில் பேசியதாக போலீசார் கைது செய்தனர்.
செய்தியாளர் : சங்கர் ( திண்டுக்கல்)
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.