கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை திருடிய 2 இளைஞர்களை சிசிடிவி காட்சிகள் மூலம் கொடைக்கானல் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் இருசக்கர வாகனங்களில் வருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாகனம் நிறுத்தம் இல்லாத தங்கும் விடுதிகளின் அருகில் உள்ள சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா பயணிகளின் இருசக்கர வாகனங்கள் திருடுபோனதாக கொடைக்கானல் காவல் நிலையத்தில் பழனி, சென்னை, காரைக்குடி பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் புகார் அளித்தனர்.
மேலும் கொடைக்கானல் மலை பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடுபோவதும் வாடிக்கையாக இருந்தது. இதனை தொடர்ந்து கொடைக்கானல் காவல் துறையினர் தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுத்தனர். மேலும் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் திருச்சி வரை சென்ற தனிப் படையினர் கடந்த ஒரு வார காலமாக திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் சிசிடிவி காட்சிகள் மூலம் வாகன எண், இருசக்கர வாகனங்களை திருடிய நபர்களின் உருவம் காட்சிகள் அடிப்படையில் திருச்சியை சேர்ந்த முகமது காலித்(வயது 21), முகமது நியாஸ்(வயது 21) ஆகிய இரண்டு இளைஞர்களை காவல் துறையினர் விசாரணை செய்யும் போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
Also Read:
சிகிச்சைக்கு சென்ற பெண்ணின் ட்ரவுசரை கழட்டி அத்துமீறிய மருத்துவருக்கு தர்ம அடி!
அதனை தொடர்ந்து இவர்களை சிறப்பாக தனி படையினர் கவனிக்கவே கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் போல் வருகை புரிந்து வறுமையின் காரணமாக சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து இந்த இரண்டு இளைஞர்களை கைது செய்து அவர்கள் மறைத்து வைத்து இருந்த விலை உயர்ந்த 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து லாரி மூலம் கொடைக்கானல் காவல் நிலையத்திற்கு தனிப்படையினர் கொண்டு வந்தனர். மேலும் இந்த இளைஞர்கள் மீது வேறு ஏதேனும் வழக்குகள் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை செய்ததில் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடுவது தெரியவந்ததை தொடர்ந்து,திருட்டில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read:
சிலம்பம் எங்கு தோன்றியது என ஆய்வு செய்ய குழு – விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தகவல்!
கொடைக்கானல் மலை பகுதிகளில் இது போன்ற குற்றச்சம்பவங்களை தவிர்க்க முக்கிய நகர் பகுதிகள், தங்கும் விடுதிகள், விடுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செய்தியாளர் ஜாபர்சாதிக் -கொடைக்கானல்உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.