தகராறில் ஈடுபட்டவர்களை தடுக்க சென்றவரின் இருசக்கர வாகனத்துக்கு தீ வைத்த மர்ம நபர்கள்
தகராறில் ஈடுபட்டவர்களை தடுக்க சென்றவரின் இருசக்கர வாகனத்துக்கு தீ வைத்த மர்ம நபர்கள்
இருசக்கர வாகனத்தை தீ வைத்த மர்ம நபர்கள்
Dharmapuri : நல்லம்பள்ளி அருகே தகராறில் ஈடுபட்டவர்களை தடுக்க சென்றவரின் இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த ஏலகிரி பகுதியை சேர்ந்தவர் பாபு (32) அதே பகுதியை சேர்ந்தவர் கேசவன் (28), நண்பர்களான இருவருக்கும் நீண்ட நாட்களாக கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாபுவிடம், கேசவன் 5 ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கி உள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு கேசவன் தான் வாங்கிய பணத்திற்கு அசல் மட்டும் பாபுவிடம் திருப்பி செலுத்தி உள்ளார். இதில் வட்டிக்காக ஆயிரம் ரூபாய் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் நேற்று இரவு இது சம்மந்தமாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறி உள்ளது.
அப்போது அப்பகுதியில் இருந்த சுரேஷ் (35) மற்றும் பெருமாள் (45) உள்ளிட்டோர் இவர்களின் சண்டையை தடுத்து சமாதானப்படுத்த முயற்சித்துள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த பாபு கல்லால் தாக்கியதில் பெருமாளின் மண்டை உடைந்தது. அவரை அருகே இருந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். பாபு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு சுரேஷ் தனது வீட்டில் இருந்த நிலையில் இன்று அதிகாலை வீட்டின் முன்பு ஏதோ சத்தம் கேட்கவே வெளியே வந்து சுரேஷ் பார்த்தபோது தனது வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த 2 இருசக்கர வாகனங்கள் தீப்பற்றி எறிந்து கொண்டிருப்பதை கண்டு கூச்சலிட்டுள்ளார்.
அவரது கூச்சலை கேட்டு அருகாமையில் இருந்த வீட்டினர் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்துள்ளனர். அதற்குள் முழுமையாக இருசக்கர வாகனம் முற்றிலும் எறிந்து கருகியது. மற்றொரு வாகனம் பாதி எரிந்த நிலையில் தீ அணைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தொப்பூர் காவல்துறையினர் இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செய்தியாளர் : சுகுமார் ரங்கநாதன், தருமபுரி
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.