சேலம் - தருமபுரி இடையே வே.முத்தம்பட்டி வனப்பகுதியில் அதிகாலையில் ரயில் தடம் புரண்டுள்ளது.
கேரளா மாநிலம் கண்ணூரிலிருந்து பெங்களூர் நோக்கி சென்றுக்கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை 3.50 மணியளவில் சேலம் - தருமபுரி இடையே உள்ள வே. முத்தம்பட்டி அருகே தடம் புரண்டது. தண்டவாளத்தின் அருகில் கற்கள் சரிந்து கிடந்துள்ளது, இதில் ரயில் உரசியதில் இன்ஜின் மற்றும் அடுத்த பெட்டி தடம் புரண்டுள்ளது. இதில் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. B1, B2 (3வது ஏசி), S6, S7, S8, S9, S10 (ஸ்லீப்பர்) பெட்டிகளில் திடீரென பாறாங்கற்கள் விழுந்ததே இந்தச் சம்பவத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
பெங்களூருவில் இருந்து மீட்பு குழுவினர் அதிகாலை 4.45 மணிக்கு உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ரயிலிருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். பின்பக்க 7 பெட்டிகளின் பாதிப்பில்லாத பகுதி, பயணிகளுடன் சேலம் நோக்கி நகர்ந்து சிறப்பு ரயிலில் திருப்பத்தூர் வழியாக பெங்களூருக்கு சென்றது. தடம்புரண்ட பெட்டிகளில் இருந்த பயணிகள் உடனடியாக பேருந்தில் ஏற்றப்பட்டு தர்மபுரி ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Published by:Ramprasath H
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.