தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு பஞ்சப்பள்ளி, சின்னாற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ளதால், 4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதனால் அங்குள்ள குடியிருப்பு வாசிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது தற்பொழுது தண்ணீர் விடும் பொழுது ஒரு சில வீட்டு உரிமையாளர்கள் மற்றும் கடை வைத்திருப்போர் மின்மோட்டார் மூலம் தண்ணீரை வேகமாக உறிஞ்சி விடுவதால் பல்வேறு இடங்களுக்கு தண்ணீர் செல்வதில்லை. இந்நிலையில் பேரூராட்சியில் வினியோகிக்கப்படும் குடிநீரை, சிலர் வீடுகளில் மின் மோட்டார் வைத்து உறிஞ்சுகின்றனர்.
அனைத்து தரப்பு மக்களுக்கும் சீரான குடிநீர் கிடைப்பதில்லை. அதிகாரிகள் குடிநீர் வினியோகிக்கும் போது, வீடுகளில் அதிரடி ஆய்வு நடத்தி. மின் மோட்டார் மூலம் . தண்ணீரை உறிஞ்சுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாரண்ட அள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் அளித்தனர்.
ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.