தருமபுரி மாவட்டம் தொட்டபடகாண்ட அள்ளி கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி சரவணன் என்பவருக்கும், திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டடிருந்தது.
இவர்களின் திருமணம் கிருஷ்ணகிரி மாவட்டம் வஜ்ஜிரபள்ளம் கிராமத்தில் உள்ள சிவன் கோயிலில் நேற்று காலை நடைபெறவிருந்தது. சரியாக காலை 7 மணி அளவில் பெண் வீட்டார் அனைவரும் கோயிலுக்கு வந்திருந்தனர். இருந்தபோதிலும் முகூர்த்த நேரமாகியும் மாப்பிள்ளை சரவணன் மற்றும் அவரது உறவினர்கள் வரவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகளின் வீட்டார் மாப்பிள்ளை வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது மணமகன் சரவணன் மதுபோதையில் உறங்கி கொண்டிருந்தது தெரியவந்தது. இதை பார்த்து கோபமடைந்த பெண்ணின் தாய்மாமன் பாலு, அங்கு உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் குடிகார மணமகன் வேண்டாம் எனவும் திருமணத்திற்காக செலவு செய்த தொகையை மாப்பிள்ளை வீட்டார் திருப்பி அளிக்க வேண்டும் எனவும் அவர் புகார் அளித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Dharmapuri