முகப்பு /செய்தி /தமிழ்நாடு / புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்.. நோடல் குழு அமைக்க டிஜிபி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்.. நோடல் குழு அமைக்க டிஜிபி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு

மாதிரி படம்

மாதிரி படம்

டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த வதந்திகள் தொடர்பான பிரச்சினைகளில் மற்ற மாநிலங்கள் மற்றும் நிறுவனங்களுடன் ஒருங்கிணைக்க, ஐந்து ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட "நோடல் குழு" உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வாழும் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த ஆய்வு கூட்டம் டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிற மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் குறித்தும், தொழிலாளர்களின் பெயர், வயது, பாலினம் மற்றும் அவர்களின் சொந்த ஊர் குறித்தும் தகவல்களை காவல்துறை சேகரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நிர்வாகம் ஐஜி அவிநாஷ்குமார் ஐபிஎஸ், தலைமையகம் டிஐஜி அபிஷேக் தீக்‌ஷித் ஐபிஎஸ், சென்னை வடக்கு போக்குவரத்து துணை ஆணையர் ஹர்ஷ் சிங் ஐபிஎஸ், IPREC SP ஆதர்ஷ் பச்சேரா ஐபிஎஸ், சண்முகப்பிரியா ஐபிஎஸ் ஆகிய ஐந்து ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட நோடல் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த "நோடல் குழுவானது" தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த தவறான பிரச்சாரங்கள் மற்றும் வதந்திகள் தொடர்பான பிரச்சனைகள் தொடர்பாக மற்ற மாநிலங்களின் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு தகவல்களை திரட்டும்.மேலும், புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த வதந்திகள் பரப்புவோர் குறித்து நோடல் குழுவானது தீவிரமாக கண்காணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் வட மாநில தொழிலாளர்கள் குறித்து எடுக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் என்னென்ன?

பிற மாநில தொழிலாளர்களுடன் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்.
பிற மாநில தொழிலாளர்களுடன் காவல் ஆய்வாளர் தொடர்பில் இருக்கும் வகையில் அவர்களில் ஒருவரை ஒருமுனை தொடர்பாளராக நியமிக்க வேண்டும்
வெளிமாநில தொழிலாளர்களுக்கான உதவி மைய தொலைபேசி எண்ணை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
காவல் ஆய்வாளர்கள் ஒரு முனை தொடர்பாளராக நியமிக்கப்பட்ட தொழிலாளர்களை உள்ளடக்கிய Whatsapp குழுவை வேண்டும். உருவாக்க பிற மாநில தொழிலாளர் வசிக்கும் இடங்களில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் இரவு பகல் ரோந்து மேற்கொள்ள வேண்டும்.
பிற மாநில தொழிலாளர்கள் அதிக அளவில் வேலை செய்யும் மற்றும் தங்கி இருக்கும் இடங்களில் பட்டா புத்தகங்கள் வைத்து அவ்வப்போது தணிக்கை செய்யப்பட வேண்டும்.
சிறிய குழுக்களாக அல்லது குடும்பமாக வசிக்கும் பிற மாநிலத் தொழிலாளர்களை சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் சந்தித்து ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால் அழைக்கும் வகையில் தங்களது அலைபேசி எண்ணை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
மதுபான கடைகள் அருகே பிரச்சினைகள் ஏதும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.காவல் ஆய்வாளர்கள் பிற மாநில தொழிலாளர்களிடம் போலியாக சித்தரித்து வீடியோக்களை வெளியிடக் கூடாது என்று அறிவுறுத்த வேண்டும்.
வெளி மாநில தொழிலாளர்களிடமிருந்து புகார்கள் ஏதேனும் காவல் நிலையத்தில் பெறப்பட்டால் அது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிற மாநிலத் தொழிலாளர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தால் அதன் காரணங்கள் குறித்து விசாரித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
உள்ளூர் ஊடக மற்றும் பத்திரிகையாளர்களிடம் வெளி மாநில தொழிலாளர்கள் குறித்து ஏதேனும் செய்தி வெளியிடும் முன் அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொண்டு வெளியிடு கேட்டுக் கொள்ள வேண்டும்.
சமூக ஊடகங்களில் ஹிந்தியில் பரப்பப்படும் போலி வீடியோக்கள் மற் தகவல்களைத் தொடர்ந்து கண்காணித்து சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் தெளிவபடுத்தி உடனடியாக செய்தி வெளியிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published:

Tags: Migrant Workers, Sylendra Babu