அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்கிறார் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்!
அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்கிறார் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்!
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
10 நாட்கள் அரசு முறைப் பயணத்தில் நகர்ப்புற மற்றும் வீட்டு வசதி திட்ட மேம்பாடு தொடர்பாக அறிந்துகொள்ள உள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.
முதலமைச்சர் பழனிசாமியை தொடர்ந்து, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா செல்ல உள்ளார்.
சென்னையில் இருந்து நவம்பர் 8-ம் தேதி அமெரிக்கா புறப்படும் அவர், சிகாகோ உள்ளிட்ட நகரங்களில் பயணம் மேற்கொள்கிறார்.
10 நாட்கள் அரசு முறைப் பயணத்தில் நகர்ப்புற மற்றும் வீட்டு வசதி திட்ட மேம்பாடு தொடர்பாக அறிந்துகொள்ள உள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். அவருடன் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணனும் உடன் செல்கிறார்.
கடந்த மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அமீரகம் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.
மேலும், அமைச்சர்கள் விஜய பாஸ்கர், ராஜேந்திர பாலாஜி, எம்.சி சம்பத் ஆகியோரும் சுற்றுப்பயணம் செய்தனர்.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.