வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், மாண்டஸ் என்ற புயலாக இன்று மாலை வலுப்பெறுகிறது. இதனால், சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நாளை மறுதினம் அதி கனமழை பெய்யும் என்று ரெட்அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று மாலை வலுப்பெற்றது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, புயலாக இன்று மாலை மாறும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. இதற்கு ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்த மாண்டஸ் என்று பெயரிடப்பட உள்ளது.
இதையும் படிக்க : அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு
இது தென்மேற்கு வங்கக்கடலை நாளை வந்தடையும் என்றும், தொடர்ந்து மேற்கு, வடமேற்கில் நகர்ந்து, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதனையொட்டி தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதியை அடுத்த 48 மணிநேரத்தில் வந்தடையும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று மிதமான மழை பெய்யும் என்றும், இன்று நள்ளிரவு முதல் மழை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய 8 மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் நாளை மறுதினம் அதீத கனமழைக்கான ரெட்அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Heavy Rains, Weather News in Tamil