கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த மீனாட்சிப்பேட்டை ஜெ.ஜெநகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். தனது அத்தை மகளான வனஜாவுக்கு இவருக்கும் ஏழாண்டுகளுக்கு முன்பு திருமணம் முடித்துந்துள்ளது.
இந்த தம்பதிக்கு ஐந்து மட்டும் ஆறு வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கட்டிட வேலை செய்து வந்த முருகன் அடிக்கடி வெளியூர் செல்வது வழக்கம். இந்நிலையில் தான் அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணா என்பவருக்கும் வனஜாவுக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.
ஒருகட்டத்தில் காதலாக மாறி இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளனர். இந்த விவகாரம் வனஜாவின் கணவர் முருகனுக்கு தெரியவந்து மனைவியை கண்டித்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு முருகன் வழக்கம் போல் கட்டிட பணிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மனைவி வனஜா வீட்டில் இல்லாததை பார்த்து பிள்ளைகளிடம் கேட்டுள்ளார்.
அத்துடன் மனைவியை அக்கம் பக்கத்தில் உள்ள தோட்டத்தில் தேடியுள்ளார் முருகன். அப்போது வனஜா தனது
கள்ளக்காதலர் கிருஷ்ணாவுடன் தனிமையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனால் கணவன் மனைவி இடையே சம்பவ இடத்திலையே சண்டை ஏற்பட்டுள்ளது.
அப்போது ஆத்திரபட்ட முருகன் தனது மனைவியையும் அவரின் கள்ள காதலனையும் அடிக்க முற்பட்டு இருக்கிறார். இந்நிலையில் திடிரென எதிர்பாராதவிதமாக முருகனை, கிருஷ்ணா தனது லுங்கியை பயன்படுத்தி கழுத்தை இறுக்கி பிடிக்க மனைவி வனஜாவும் சேர்ந்து இருவரும் அடித்து கொலை செய்துள்ளனர். இந்த கொலையை மறைக்க கடன் தொல்லை தாங்க முடியாமல் தனது கணவன் தூக்கிட்டு கொண்டதாக நாடகமாடி உள்ளார்.
உறவினர்களும் அதை நம்பி இறந்த முருகன் பிரேதத்தை மயானத்தில் எரிக்க முற்படும் போது குறிஞ்சிப்பாடி போலீசார் விரைந்து சென்று பிரேதத்தை எரியூட்டும் முன்பே தடுத்து பிரேதத்தை கைபற்றி சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது சம்பந்தமாக குறிஞ்சிப்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டதில், முருகனை அவரது மனைவியும், கள்ளக் காதலனும் சேர்ந்து கொலை செய்து இருப்பது தெரிய வந்ததுள்ளது.
strong>Follow @ Google News:
கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதனை அடுத்து இருவரையும் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த கள்ள காதல் மோகத்தால் தாய் சிறை சென்றதாலும் தந்தை உயிரிழந்ததாலும் இரு குழந்தைகள் தற்போது ஆதரவின்றி இருப்பது இப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.