கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே பக்தர் தலையில் தீயிட்டு பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. குழுந்தை இல்லாதவர்களுக்கும் உடல் நிலை பாதிக்கப்பட்ட வர்களுக்கும் வேண்டுதல் நிறைவேற சாமிக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, தலையில் தீயிட்டு பொங்கல் வைக்கும் நேர்த்திக்கடன் செலுத்தப்படுகிறது.
பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற கடவுளுக்கு பல விதமாக காணிக்கைகள் செலுத்துகின்றனர். சிலர் பணமாகவோ, பொருளாகவே, மொட்டை அடிப்பது என காணிக்கைகளை செலுத்துகின்றனர். சில இடங்களில் தலையில் தேங்காய் உடைப்பது போன்ற விநோத வழக்கங்களும் உண்டு.
கடலூர்மாவட்டம் வேப்பூர் அருகே சேப்பாக்கம் கிராமத்தில் அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிழா நடைப்பெற்றது. அப்போது பக்தர்கள் முன்னிலையில் பக்தர் ஒருவர் தலையில் மண்ணெண்ணெயில் நனைத்த துணையை சக்கர வடிவில் கட்டுகின்றனர். பின்னர், அந்த தலையில் வைத்து துணியை எரியவிட்டனர். பின் ஒரு பாத்திரத்தை தலைமீது வைத்து வெள்ளம் போட்ட பொங்கல் செய்து சாமி ஊர்வலத்தில் சாமிக்கு படைத்தனர்.
இதையும் படிங்க: நள்ளிரவில் குடிபோதையில் கல்லூரி மாணவர்கள் அடாவடி.. போலீசாரை ஆபாசமாக பேசி தாக்குதல்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..
பின்னர், குழந்தையில்லாதவர்களுக்கும் உடல் நிலைப் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்ஹ்ட பொங்கலை பிரசாதமாக தருகின்றனர். பிரசாதத்தை வாங்கி சாப்பிடுபவர்களின் குறைகள் கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து அவர்கள் பிராத்தனை நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
செய்தியாளர்: பிரேமானந்த் - கடலூர் உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.