தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவியில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களைகட்டும். இந்த சீசனை அனுபவிப்பதற்கு பல்வேறு பகுதியில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தந்து ஆர்பரித்து வரும் அருவியில் குளித்து மகிழ்ந்து செல்வார்கள்.
இந்தாண்டு வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே பெய்தால் பிரதான அருவியான குற்றால மெயின் அருவி, புலியருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து வரத்துவங்கியது. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்து சென்றனர்.
இந்த நிலையில் இன்று வாரவிடுமுறை என்பதால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனா தொற்று பரவல் காரணமாக அருவியில் குளிக்க முடியாமால் இருந்த நிலையில் தற்போது இந்த ஆண்டு சீசன் துவக்கி உள்ளதாலும் மெல்லிய சாரல் மழையில் நனைந்தபடி குளித்து செல்வது மகிழ்ச்சியாக இருந்தாக தெரிவித்தனர்.
மேலும் சீசன் இன்னும் ஓரிரு நாட்களில் களை கட்ட உள்ள நிலையில் முன்கூட்டியே அருவியில் ஆர்பரித்து வரும் தண்ணீர் வருவதால் சுற்றுலா பயணிகளும் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
செய்தியாளர்: ச.செந்தில், தென்காசி.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.