தஞ்சாவூரைச் சேர்ந்த ஆசிரியர் ராதா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரண நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் நடந்தது. அபோது நீதிபதி முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தார்.
அதன்படி, அரசு பள்ளி ஆசிரியர்களின் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆய்வுகள், தகவல்கள், புகார்கள், ஆதாரங்கள் போன்றவற்றைச் சேகரிக்க, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சிறப்புக் குழுக்களை பள்ளி கல்வி துறை முதன்மை செயலாளர் 4 வாரங்களில் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும், அரசு ஆசிரியர்களாக பணியில் இருந்து கொண்டே, தொழிலில் ஈடுபடுவது, பிற இடங்களில் பகுதி நேர வேலை பார்ப்பது, டியூஷன் சென்டர்களை நடத்துவது, பயிற்சி மையங்களை நடத்துவது ஏற்புடையது அல்ல என்று கூறிய நீதிபதி, இவை அனைத்தும் அரசு ஊழியர் விதி 1973 க்கு எதிரானது என்றும், எனவே, அவ்வாறு டியூஷன் சென்டர் நடத்தும் அரசு ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
Must Read : உக்ரைன் தலைநகரை விட்டு இன்றைக்குள் இந்தியர்கள் வெளியேற திடீர் அறிவுறுத்தல்...
அத்துடன், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீதான முறைகேடுகள், புகார்கள் தெரிவிக்க தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் எண் போன்றவற்றை உருவாக்கி விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் கூறிய நிதிபதி, மேற்கண்ட உத்தரவுகளை 4 வாரங்களில் செயல்படுத்த வேண்டும் என்றும், அதன் அறிக்கையை பள்ளி கல்வி துறை முதன்மை செயலாளர் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Govt teachers, Madhurai high court, Tuition