தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ள நிலையில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 245 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 4 மாதங்களாக கொரோனா தொற்று பரவல் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் 38 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் 37 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னை மற்றும் கோவையில் தலா 9 பேருக்கும், செங்கல்பட்டில் 3 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனால், தமிழ்நாட்டில் தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 245-ஆக அதிகரித்துள்ளது. அதில் 27 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனா தடுப்பு வழிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும் என பொதுமக்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona positive, CoronaVirus, Covid-19