தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 3,500க்கும் கீழ் குறைந்தது. இதேபோல், 8 மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட கொரோனாவால் உயிரிழக்கவில்லை.
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று புதிதாக 3,367 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இதுவரை 25,06,848 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கொரோனாவிலிருந்து 3,367 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில் 24,39,576 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர். தற்போது 34,076 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று ஒரே நாளில் 64 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு 33,196 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் திண்டுக்கல், ஈரோடு, கரூர், பெரம்பலூர், சிவகங்கை, திருவாரூர், தூத்துக்குடி, விழுப்புரம் ஆகிய 8 மாவட்டங்களில் புதிதாக ஒருவர் கூட கொரோனாவால் உயிரிழக்கவில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona, Corona death, Tamilnadu