கொரோனா இரண்டாவது அலையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் 5 சிங்கங்களுக்கு கடந்த 26-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டது. பசியின்மை ஏற்பட்டதுடன், சில நேரங்களில் இருமல் பாதிப்பும் இருந்தது. இதையடுத்து, பூங்காவில் உள்ள மருத்துவக் குழுவினர் உடனடியாக சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 11 சிங்கங்களின் ரத்த மாதிரிகள் கால்நடை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
மேலும், மூக்கு சளி மற்றும் குடல் மாதிரிகள் போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு நோய்களுக்கான தேசிய ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 9 வயதான நீலா என்ற பெண் சிங்கம், நேற்று இரவு 6.15 மணிக்கு உயிரிழந்தது. அந்த சிங்கத்துக்கு நேற்று முன்தினம் முதல் சளி வெளியேறியதாகவும், உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பூங்கா நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
இந்த சூழலில் 9 சிங்கங்களுக்கு
கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகளை உறுதிப்படுத்தவும், இணை நோயால் பெண் சிங்கம் உயிரிழந்ததா என்பதை அறியவும், இந்த மாதிரிகள், பரேலி, ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் உள்ள ஆய்வகங்களுக்கு இன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கொரோனா தொற்று உறுதியான சிங்கங்களுக்கு உரிய விதிமுறைகளின்படி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், பணியாளர்களுக்கு கவசஉடை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.