கூட்டுறவு வங்கிகளில் பொதுமக்களுக்கு நகைகளை அடமானம் வைப்பதன் பேரில், கடன் வழங்கப்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள பெரும்பான்மை மக்கள், தங்களிடம் கைவசம் உள்ள தங்க நகைகளை கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைத்து பணம் பெற்று வந்தனர்.
இந்நிலையில், வாடிக்கையாளர்களிடம் நகைகளை அடமானமாக பெறுவதை நிறுத்துமாறு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர்களுக்கு மூன்று தினங்களுக்கு முன்பு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கூட்டுறவு சங்கங்களை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் எடுக்க மத்திய அரசு திட்டமிடுகிறது!
இனி கூட்டுறவு வங்கிகளும் சங்கங்களும் நகைக்கடன் வழங்கக் கூடாது என அறிவித்து நகைக்கடனை ரத்து செய்கிறது அதிமுக அரசு!
கூட்டுறவின் நோக்கமும் சிதையும்; சாமானியர்களின் வாழ்வும் நிர்கதியாகும். pic.twitter.com/PmIkyh47zg
— M.K.Stalin (@mkstalin) July 14, 2020
இந்த நவடிக்கைக்கு திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gold loan