முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு நெஞ்சு வலி- மருத்துவமனையில் அனுமதி

ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு நெஞ்சு வலி- மருத்துவமனையில் அனுமதி

ஈவிகேஎஸ்.இளங்கோவன்

ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெஞ்சு வலி காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதயவியல் நிபுணர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் திடீரென உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்தத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற்றது. அதனையடுத்து, அந்தத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் திருமகனின் தந்தையும் காங்கிரஸின் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டார். அ.தி.மு.க சார்பில் தென்னரசு போட்டியிட்டார்.

தி.மு.க ஆதரவுடன் களமிறங்கிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தென்னரசு விட 60,000-க்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதனையடுத்து, எம்.எல்.ஏவாக பதவியேற்றார்.

திருச்சி சிவா, கே.என்.நேரு ஆதரவாளர்கள் மோதல்.... தி.மு.க நிர்வாகிகள் 4 பேர் காவல் நிலையத்தில் சரண்

இந்தநிலையில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. அதனையடுத்து, சென்னை போரூரிலுள்ள ராமசந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

First published:

Tags: EVKS Elangovan