ஜப்பான் முன்னாள் பிரதமர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக தமிழகத்தில் நாளை அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஜப்பான் நாட்டின் மேலவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்நாட்டின் நாரா நகரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போது ஷின்சோ அபே சுடப்பட்டார். அவர் உடனடியாக ஹெலிகாப்படர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு மரடைப்பு ஏற்பட்டு நினைவற்ற நிலையில் உள்ளதாக முதற்கட்ட மருத்துவமனை தகவல்கள் தெரிவித்தன. தொடர்ந்து, அபேவின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்ட போதும், அவர் உயிரிழந்தார்.
67 வயதான ஷின்சோ அபே ஜப்பான் நாட்டில் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமையை கொண்டுள்ளார். முதன்முதலாக 2006ஆம் ஆண்டு பிரதமராக தேர்வான அவர், உடல் நலக்குறைவு காரணமாக ஓராண்டிலேயே பதவி விலகினார்.பின்னர், 2012ஆம் ஆண்டில் மீண்டும் பிரதமராக தேர்வான அவர் 2020ஆம் ஆண்டு வரை இப்பதவியில் தொடர்ந்தார். இந்நிலையில்,2020ஆம் கோவிட் பெருந்தொற்று பரவல் ஏற்பட்ட நிலையில், தனது உடல்நிலையை காரணம் காட்டி பதவி விலகினார் ஷின்சோ அபே.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஷின்சோ அபேவின் மரணத்தையடுத்து பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவில் ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஜப்பான் முன்னாள் பிரதமர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக தமிழகத்தில் நாளை அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் ஷின்சோ அபே மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க தேசியக் கொடியை அரைகம்பத்தில் பறக்கவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.