சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் தொடர்பாக வரப்பெற்ற புகார்களை அடுத்து கோவில் சட்ட விதிகளின்படி நிர்வகிக்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக இந்த மாதம் 7 மற்றும் 8ம் தேதிகளில் 5 பேர் அடங்கிய இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையால் உருவாக்கப்பட்ட குழுவினர் வருகை புரிந்தனர்.
வருகை புரிந்த குழுவினருக்கு விபூதி பிரசாதங்கள் கொடுத்து வரவேற்று கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்து வைத்த தீட்சிதர்கள் தொடர்ந்து அவர்களிடம் உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் நிர்வகிக்கப்படுவதாக கூறி தீட்சிதர்கள் கோவில் கணக்கு வழக்குகளை காண்பிக்க மறுத்திருந்தனர்.
வேண்டுமென்றால் உச்ச நீதிமன்றம் மூலம் சட்டரீதியாக அமைக்கப்பட்ட குழுவினருக்கு மட்டுமே கணக்கு வழக்குகளை காண்பிக்க முடியும் எனவும் கூறினர். அதனை தொடர்ந்து கோவில் சொத்துக்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட குழுவினர் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை தயார் செய்து ஆணையருக்கு அனுப்பி சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்து சென்றனர்.
அதனைத் தொடர்ந்து இன்று இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை அதிகாரிகள் சிதம்பரம் நடராஜர் கோவில் தொடர்பாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்தனர் .அதில் சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றி கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வருகின்ற 20ஆம் தேதி 21ம் தேதி ஆகிய இரண்டு நாட்களுக்குள் பக்தர்கள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chidambaram