கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த தம்பதி மணி- சரோஜினி. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் மணி. இவரது மனைவி சரோஜினி கிணத்துக்கடவு அரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட சரோஜினியை அவரது மகள் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் சரோஜினி நேற்று இரவு உயிரிழந்தார். மனைவி உயிரிழந்த அதிர்ச்சியில் இருந்த அவரது கணவர் மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
மருத்துமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவரது உயிரும் பிரிந்தது. கணவன் மனைவி இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இருவரது உடலையும் ஒரே நேரத்தில் நஞ்சுண்டாபுரம் மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது.
Published by:Vaijayanthi S
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.