கோவையில் கனமழையால் குண்டும் குழியுமாக இருந்த சாலை ஒன்றை போக்குவரத்து காவலர் ஒருவர் மண்வெட்டி மூலம் சீரமைத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.
கோவையில் உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மேம்பால கட்டுமான பணிகள் 50 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில், ஆத்துப்பாலம் பகுதியில் மேம்பாலத்திற்கான தூண் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பாலக்காடு செல்லும் முக்கிய சாலை என்பதால் இந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருக்கும்.
தற்போது மழை பெய்து வரும் நிலையில், பாலம் வேலையும் நடைபெறுவதால் அந்த சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக இருப்பதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாவது தொடர்ந்தது. இந்த நிலையில், அந்த சாலையை போக்குவரத்து போலீசார் மண்வெட்டியை வைத்து சமன்படுத்தியுள்ளனர். போக்குவரத்து போலீசார் சாலையை சீரமைப்பதை அங்குள்ள ஒருவர் வீடியோவாக பதிவு சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.
Published by:Ramprasath H
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.