கோவை சரவணம்பட்டி அடுத்த சிவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 11 ம் தேதி சனிக்கிழமை பள்ளி சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை என கூறப்படுகின்றது. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் மகளை காணவில்லை என புலியகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடிவந்தனர்.
Also Read : திண்டுக்கல்லில் பள்ளி மாணவி எரித்துக்கொலை - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
இந்நிலையில் இன்று காலை மாணவியின் வீட்டிற்கு அருகே இருக்கும் முட்புதர் பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் துப்புறவு பணியாளர்களுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் அங்கு வந்து பார்த்த போது கை,கால்கள்,கழுத்துடன் சேர்த்து கட்டப்பட்ட நிலையில், பெட்சீட்டில் சுற்றப்பட்டு சிறுமியின் சடலம் கிடப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு விரைந்த சரவணம்பட்டி காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததனர்.
மேலும் மாணவியை கொலை செய்தது யார், எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்தும் மாணவி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Online crime