முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கோட நாடு பங்களாவுக்கு யாரெல்லாம் வந்து செல்வார்கள்? - ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் 9 மணி நேர விசாரணை

கோட நாடு பங்களாவுக்கு யாரெல்லாம் வந்து செல்வார்கள்? - ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் 9 மணி நேர விசாரணை

கோடநாடு வழக்கு

கோடநாடு வழக்கு

Coimbatore | கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக  ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் 9 அரை மணி நேரமாக நடைபெற்ற விசாரணை.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

hrpகோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக  கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நேற்று 3-வது நாளாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் 9 அரை மணி நேரமாக விசாரணை நடத்தப்பட்டது. கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள அலுவலகத்தில்  கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நபர்களை அழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாகமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் ஏப்ரல் 29,30 ஆகிய  இரு தினங்கள் 18 மணி நேரம் விசாரணையானது நடத்தப்பட்டது.

இதனையடுத்து  முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஆறுகுட்டியின் உதவியாளர் நாராயணசாமியிடம் கடந்த மே 2 ம் தேதி விசாரணை நடத்தப்பட்டது.இந்நிலையில் நேற்று மீண்டும் 3 வது நாளாக ஜெயலலிதாவின் உதவியாளர்  பூங்குன்றனிடம் விசாரணையானது நடைபெற்றது. பூங்குன்றன் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்திற்கு காலை 10.30 மணி அளவில் விசாரணை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஏற்கனவே கோடநாடு பங்களாவுக்கு யாரெல்லாம் வந்து செல்வார்கள் , அங்கு என்னென்ன ஆவணங்கள் வைக்கப்பட்டிருக்கும் என்பது குறித்து பூங்குன்றனிடம் விசாரணையானது நடத்தப்பட்டது.

Also Read: விசாரணை கைதி மரண வழக்கு: காவல் ஆய்வாளர், ஆட்டோ ஓட்டுனரிடம் சி.பி.சி.ஐ.டி நீண்ட விசாரணை

மேலும் கோடநாடு வழக்கு தொடர்பாக கைதான நபர்களிடம்  இருந்து கைப்பற்றப்பட்ட பரிசுப் பொருள்கள் கோடநாடு பங்களாவில் இருந்ததுதானா என்பது குறித்தும் பூங்குன்றனிடம்  விசாரணையானது நடத்தப்பட்டுள்ளது. இப்படியிருக்க நேற்று காலை 10.30 மணி முதல் இரவு 8 மணி வரை என கிட்டத்தட்ட ஒன்பதரை மணி நேரமாக தீவிர விசாரணை நடைபெற்றுள்ளது. இந்த விசாரணையைத் தொடர்ந்து பூங்குன்றன் தனது காரின் மூலம் பயிற்சி பள்ளி மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

செய்தியாளர் : ஜெரால்டு ( கோவை)

First published:

Tags: Crime News, Jayalalitha, Kodanadu estate, Tamil News, Tamilnadu