முகப்பு /செய்தி /தமிழ்நாடு / உக்ரைன் ராணுவத்தில் இணைந்த தமிழக மாணவர் இந்தியா திரும்ப விருப்பம்

உக்ரைன் ராணுவத்தில் இணைந்த தமிழக மாணவர் இந்தியா திரும்ப விருப்பம்

சாய் நிகேஷ்

சாய் நிகேஷ்

உக்ரைன் ராணுவத்தில் இணைந்து ரஷ்யாவுக்கு எதிராக போரிட்டு வரும் தமிழக மாணவர் சாய் நிகேஷ் உடன் அவரது பெற்றோர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இதன் பலனாக அவர் இந்தியா திரும்ப சம்மதம் தெரிவித்துள்ளார். அவரை மீட்கும் நடவடிக்கையில் இந்திய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

உக்ரைன் ராணுவத்தில் இணைந்து ரஷ்யாவிற்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் கோவையை சேர்ந்த மாணவர் சாய்நிகேஷ் இந்தியா வர விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், இந்திய அதிகாரிகள்  அவரை அழைத்து வர முயற்சித்து வருவதாகவும் மாணவரின்  தந்தை ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த சாய்நிகேஷ் ரவிசந்திரன் என்பவர் கடந்த 2019ம் ஆண்டு  முதல் உக்ரைனில் உள்ள கார்கோ  நேசனல் ஏரோஸ்பேஸ் பல்கலைக்கழகத்தில் விமானவியல் துறையில் படித்து வருகின்றார். தற்போது 4ம் ஆண்டு படித்து வரும் அவர் உக்ரைன் நாட்டில் உள்ள ஜார்ஜியன் நேசனல் லிஜியன் எனும் துணை இராணுவ பிரிவில் இணைந் ரஷ்யாவுக்கு எதிராக போரிட்டு வருகிறார்.

சிறு வயது முதலே இராணுவத்தில் சேர வேண்டும் என விரும்பிய சாய்நிகேஷ் ரவிசந்திரன், அதற்காக இந்திய ராணுவத்திற்கு  விண்ணப்பித்து இருந்தார். ஆனால் உயரம் குறைவாக இருந்ததால் இந்திய இராணுவத்தில் அவர் சேர்க்கப்பட வில்லை. அமெரிக்க தூதரகத்திலும் இராணுவ பணியில் சேர  முயற்சித்து தோற்று போனார். இந்நிலையில்  உக்ரைனின் நடைபெறும் போர் காரணமாக அங்குள்ள துணை இராணுவ படையில் சாய்நிகேஷ் ரவிசந்திரன் சேர வாய்ப்பு கிடைத்துள்ளது.

சாய்நிகேஷ் உக்ரைன் துணை இராணுவத்தில் இணைந்து இருப்பதை அந்நாடும் உறுதிபடுத்தியது. இந்நிலையில்  சாய்நிகேஷ்  உக்ரைன் துணை இராணுவத்தில் இணைந்து இருப்பதை அறிந்த மத்திய , மாநில உளவு பிரிவு அதிகாரிகள் இது குறித்து ராமச்சந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது உக்ரைனில் இருக்கும் சாய்நிகேஷ் பெற்றொரிடம் தொடர்ந்து தொடர்பில் இருப்பதும் தெரியவந்தது.

மாணவர் சாய் நிகேஷ்

இந்தியா திரும்புமாறு அழைத்தும்,  நாடு திரும்பாமல் தொடர்ந்து உக்ரைன் துணை ராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார். உக்ரைன் நாட்டில் உள்ள அனைத்து இந்திய மாணவர்களுக்கும் வெளியேற்றப்பட்டு விட்டனர். இந்நிலையில் சாய்நிகேஷுடம் அவரது  பெற்றோர் தொடர்ந்து பேசிய நிலையில் அவர் நாடு திரும்ப சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சென்னையில் வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி கொள்ளை.. கணவன், மனைவி உள்ளிட்ட 3 பேர் கைது!

இதனையடுத்து இதுதொடர்பான தகவலை இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளிடம் சாய்நிகேஷின்  பெற்றோர் தெரிவித்துள்ளனர். வெளியுறவு துறை  அதிகாரிகளும் சாய்நிகேஷை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்வதாக உறுதியளித்து இருப்பதாகவும், தாங்களும் நம்பிக்கையுடன் காத்திருப்பதாகவும் சாய்நிகேஷின் தந்தை ராமசந்திரன்  தெரிவித்துள்ளார்.

First published:

Tags: India, Russia - Ukraine