பொள்ளாச்சி அருகே மின்வாரியத்தின் அலட்சியத்தால் கணவன் மனைவி உயிரிழப்பு!
பொள்ளாச்சி அருகே மின்வாரியத்தின் அலட்சியத்தால் கணவன் மனைவி உயிரிழப்பு!
கிணத்துக்கடவு காவல் நிலையம்
அறுந்து விழுந்த கம்பியை சரி செய்ய கிட்டத்தட்ட ஒரு வாரமாக மின் வாரிய ஊழியர்கள் யாரும் வராததால் இதுபோன்ற உயிரிழப்பு சம்பவம் நடைபெற்று இருப்பதாக அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி அருகே மின்வாரியத்தின் அலட்சியத்தால் தடுப்பணையில் அறுந்து விழுந்த மின் கம்பியின் மின்சாரம் தாக்கி கணவன் மனைவி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சிங்கையன்புதூர் பகுதியிலுள்ள ராமராஜ் என்பவர் தென்னந்தோப்பில் கேரளா மாநிலம் கொழிஞ்சாம்பாறை பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் தேங்காய் உரிக்கும் பணியில் இன்று ஈடுபட்டு வந்தனர்.
அப்போது தேங்காய் உரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த ராசு என்பவர், தோட்டத்தின் அருகே உள்ள தடுப்பணை அருகே இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்றார், அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி ராசு உயிரிழந்தார், வெகு நேரமாகியும் ராசு வராததால் அவரை பார்க்க சென்ற அவரது மனைவி மல்லிகாவும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் கிணத்துக்கடவு காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த கிணத்துக்கடவு காவல்துறையினர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த கணவன் மனைவியின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த ஒரு வாரமாக தடுப்பணைக்கு மேலே இருந்த மின் கம்பி அறுந்து விழுந்ததில் தடுப்பணையில் உள்ள தண்ணீரில் இருந்து சுமார் ஐந்து பாம்புகளும் மற்றும் மீன்கள் இறந்ததை கண்டு விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து மின்வாரியத்துக்கு தகவல் கொடுக்கபட்டதாக தெரிகிறது.
ஆனால் அறுந்து விழுந்த கம்பியை சரி செய்ய கிட்டத்தட்ட ஒரு வாரமாக மின் வாரிய ஊழியர்கள் யாரும் வராததால் இதுபோன்ற உயிரிழப்பு சம்பவம் நடைபெற்று இருப்பதாக அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
எனவே மின்சாரம் தொடர்பாக விவசாயிகள் கூறும்போது புகாருக்கு மின்வாரியம் ஊழியர்கள் அலட்சியம் காட்டாமல் உடனடியாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற உயிர்களை சேதங்களை தவிர்க்க முடியும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
செய்தியாளர் - ம.சக்திவேல்
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Esakki Raja
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.