கோவை போத்தனூர் பகுதியில் கடந்த 18ம் தேதி வெளிநாட்டைச் சேர்ந்த இளைஞர் சந்தேகத்திக்கிடமான வகையில் சுற்றித் திரிவதாக போத்தனூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்து. இதனை தொடர்ந்து அவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்னர்.விசாரணையில், அவர் ஜார்ஜிய நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவரிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் இருந்த நிலையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர் எந்த தகவலும் தெரிவிக்காமல் "ஹர ஹர சங்கர மஹாதேவா" என்று மட்டும் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் ஜார்ஜியா நாட்டு இளைஞர் குறித்து விசாரித்தபோது, ஈஷா மையத்திற்கு வந்த அவர் பின்னர் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்திலேயே தனியாக வீடு எடுத்து தங்கி இருப்பதும் அவரது பெயரில் முர்மேன் மும்லேட்ஸ் என்பதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து ஜார்ஜிய இளைஞர் முர்மேன் மும்லேட்ஸ் குறித்து வெளிநாடு பாஸ்போர்ட் துறை அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கடந்த 11ம் தேதியுடன் அவரது விசா காலம் நிறைவடைந்து இருப்பதும், சட்டவிரோதமாக அவர் இங்கு தங்கி இருப்பதும் தெரியவந்தது.
Must Read : கோடநாடு வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் நாளை விசாரணை
இதனையடுத்து அவரை கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.