கோவையில் இயங்கி வரும் விதை சான்று மையத்தை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விதைகளுடன் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை தடாகம் சாலையில் தமிழக வேளாண் துறையின் கீழ் இயங்கி வரும் விதை சான்று அலுவலகத்தை சென்னைக்கு மாற்ற திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகின்றது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த முயற்சி நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தற்போது மீண்டும் விதை சான்று மையத்தை இடம்மாற்ற திட்டமிடுவமாக கூறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கைகளில் விதைகளை பிடித்தபடி ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள்,கோவையில் 100 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வரும் விதை சான்று மையத்தை மாற்ற சென்னைக்கு திட்டமிட்டுள்ளதாகவும், தமிழக முதல்வருக்கு தெரியாமல் விதை சான்று மையத்தை இடமாற்றம் செய்ய அதிகாரிகள் முயல்வதாகவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் குற்றம்சாட்டினர்.
சென்னைக்கு விதை சான்று மையத்தை மாற்றினால் விவசாயிகள் சிரமத்திற்கு உள்ளாவார்கள் எனவும், இந்த முயற்சி கைவிடப்பட வில்லை எனில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
Published by:Vinothini Aandisamy
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.